அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவுள்ள இயற்கை!


நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையை ஊடறுத்து வீசும் காற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சாதகமான காலநிலைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் மழை ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20ம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சியான காலநிலை நிலவும். எனினும் இரவு வேளைகளில் சில பிரதேசங்களில் குளிரான காலநிலை காணப்படும்.

எனினும் அண்மைய நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் உறைபனியுடனான காலநிலை நிலவுகிறது. இதன்காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வரண்டு காணப்படுவதால் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவுள்ள இயற்கை! Reviewed by Author on January 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.