வெள்ளை மாளிகையில் மகள் எப்படி வளர்ந்தனர்? ஜனாதிபதி ஒபாமா உருக்கமான பேச்சு
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தன்னுடைய இரண்டு மகள்கள் வெள்ளை மாளிகையில் எப்படி வளர்ந்தனர் என்பது குறித்து ஒபாமா உருக்கமாக பேசியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது சாஷா மற்றும் மலியா மகள்களுடன் 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்தார்.
ஜனாதிபதியின் அதிகாரத்துடன் தந்தை உள்ளபோது தன்னுடைய மகள்கள் அதனை தவறாக பயன்படுத்தி விடுவார்களா என ஒபாமாவும் மீச்செல்லும் கவலைக் கொண்டனர்.
ஆனால், பெற்றோரின் கவலையை போக்கும் வகையில் இருவரும் 8 ஆண்டுகளாக அன்பாகவும் மரியாதையாகவும் வளர்ந்துள்ளனர்.
வெள்ளை மாளிகை அதிகாரிகளிடமும் பொது மக்களிடமும் மிகுந்த மரியாதையாகவும் பழகினர். இது பெற்றோர்களாகிய எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.
மகள்களை இந்தளவிற்கு வளர்த்த தன்னுடைய மனைவியான மீச்செலுக்கு தான் இந்த பெருமை அனைத்தும் சேரும் என ஒபாமா உருக்கமாக பேசியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் மகள் எப்படி வளர்ந்தனர்? ஜனாதிபதி ஒபாமா உருக்கமான பேச்சு
Reviewed by Author
on
January 11, 2017
Rating:

No comments:
Post a Comment