வித்தியா கொலை வழக்கு : 11 பேர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒருவர் மட்டும் யாழ்.மேல் நீதிமன்றில்
யாழ். புங்குடுதீவில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 பேரில் 10ஆம் சந்தேகநபரை தவிர்த்து மற்றைய 11 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த 11 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் றியாழ் உத்தரவிட்டுள்ளார்.
இதில் 10ஆவது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் மனு யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டதால் 10ஆவது சந்தேகநபரான கரகே பேடிக்கே பியவர்த்தன ராஜ்குமார் யாழ்.மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வித்தியா கொலை வழக்கு : 11 பேர் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஒருவர் மட்டும் யாழ்.மேல் நீதிமன்றில்
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment