மனித உயிர்களை பாதுகாக்க இலங்கை மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு!
இலங்கையில் யானை - மனிதன் மோதல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மாத்தறை ராஹுல வித்தியாலயத்தில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சஞ்சுல கத்சர மற்றும் நதுன் நவாஞன் ஆகிய மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யானையில் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலான இயந்திரம் ஒன்றை இம்மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
யானை கிராமத்தை நெருங்கும் போது தானாகவே இயங்கி பாரிய சத்தத்தை ஏற்படுத்துவதோடு, யானைக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் செயற்படும்.
அத்துடன் இது பன்றி மற்றும் மயில்களை விரட்டுவதற்கும், இந்த இயந்திரம் உதவும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த இயந்திரத்தை 1500 ரூபாய் என்ற சிறிய தொகையில் பெற்றுக் கொள்ள முடியும் என குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
யானை வெடியினால் ஏற்படுகின்ற சுகாதார பாதிப்புகளை இந்த இயந்திரத்தின் ஊடாக கட்டுப்படுத்தவும், உயிர் ஆபத்துக்களை குறைப்பதற்கும் கூடிய வகையில் பயன்படுத்த முடியும் எனவும் அந்த மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மனித உயிர்களை பாதுகாக்க இலங்கை மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
February 07, 2017
Rating:

No comments:
Post a Comment