அண்மைய செய்திகள்

recent
-

மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கணவன்.. ஏன்.... அதிர்ச்சி


இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இக்னோரியா பகுதியின் கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயண் சிங்(38). விவசாயியான இவருக்கு சரிதா(28) என்ற மனைவி உள்ளார். சரிதாவுக்கு அப்பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த நாரயண் தன் மனைவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தன் மனைவி மீது சந்தேகம் தீராத அவர் மனைவியை கண்காணிப்பதற்கு உளவாளி ஒருவரை தயார் செய்துள்ளார்.

அவரும் அவ்வப்போது மனைவி குறித்து தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி சரிதா அவர் கதலனுடன் ஊர் சுற்றியது போல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சரிதாவின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு, அப்பகுதியில் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தலையை கொண்டு சென்று சரண் அடைந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், மனைவியின் கள்ளக்காதல் நாரயணனுக்கு தெரிந்துள்ளது. அதன் பின்னர் அவர் இரண்டு முறை அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை இதனால் அவர் சரிதாவை கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக நாரயண் சிங்கிடம் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கணவன்.. ஏன்.... அதிர்ச்சி Reviewed by Author on February 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.