அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு-அச்சத்தில் கிராம மக்கள்

மன்னார் மாவட்டம் நானாட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திடீர் மூச்சுத்தினரல் காரணமாக நானாட்டன் பிரதேச வைத்திய சாலைக்கு இன்று திங்கட்கிழமை (20) மதியம் உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலையின் வைத்தியர் நீண்ட நேரம் அசமந்த போக்குடன் செயற்பட்டதன் காரணமாக குறித்த நோயாளி உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக உறவினர்களினால் முயற்சியினால் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வயோதிப பெண்ணின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வயோதிப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பேச்சு,மூச்சற்ற நிலையில் இன்று (20) திங்கட்கிழமை மதியம் 1.35 மணியளவில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது குறித்த வைத்திய சாலையின் வைத்தியர் தனது விடுதிக்கு சென்றிருந்தார்.

எனினும் குறித்த வைத்தியர் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என கூறி சம்பவ நேரம் கடமையில் இருந்த தாதியர் நோயாளியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்.

பின்னர் தாதியரினால் நாடித்துடிப்பு அளக்கும் கருவியின் மூலம் நாடித்துடிப்பை அளந்து விட்டு,வைத்தியரிடம் சென்று குறித்த பெண்ணின் நிலை குறித்து கூறிய போதும், குறித்த வைத்தியர் தான் உணவருந்துவதாகவும், உணவருந்தி முடிந்த பின்பே தான் வந்து நோயாளியை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும் நேரம் மாலை 2.10 மணியாகிய நிலையில் வைத்தியார் வந்து குறித்த குறித்த நோயாளியை பார்க்கவில்லை.இதனால் அச்சமடைந்த உறவினர்கள் உடனடியாக குறித்த வயோதிப பெண் நோயாளியின் நிலை மோசமாக இருந்த நிலையில் குறித்த நோயாளியை மீண்டும் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதன் போது கூட நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரான சிங்கள வைத்தியர் வந்து நோயாளியை பார்க்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-தற்போது குறித்த வயோதிப பெண் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் தொடர்ந்தும் குறித்த சிங்கள வைத்தியரின் தன்னிச்சையான செயற்பாட்டின் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் குறித்த வைத்தியரின் தன்னிச்சையான நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் தொடர்ந்தும் பாதீக்கப்பட்டு வருவதாகவும்,உயர் அதிகாரிகள் குறிப்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு,நானாட்டான் பிரதேச மக்கள் குறித்த வைத்திய தேவைக்காக எதிர் நோக்கும் அவசர பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அந்த மக்கள் கோரிக்கை விருத்துள்ளனர்.

-இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி யூட் ரதனி அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,,,

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக நான் அறிகின்றேன்.
எனினும் பொது மக்கள் மற்றும் பாதீக்கப்பட்டவர்களினூடாக இது வரை எனக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.

முறைப்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
எனினும் தற்போதைய பிரச்சினை குறித்து உரிய விசாரனைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

நமது நிருபர்


மன்னார் நானாட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியரின் அசமந்த போக்கு-அச்சத்தில் கிராம மக்கள் Reviewed by NEWMANNAR on March 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.