அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டியில் வீடு பங்கீட்டில் முறைக்கேடு-பாதீக்கப்பட்ட முஸ்ஸீம் மக்கள் விசனம்.(படம்)

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பகுதியில் வெளிநாட்டு நிதி உதவியுடன் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் முயற்சியினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ள விதம் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதோடு, உண்மையாக பாதீக்கப்பட்ட முஸ்ஸீம் மக்களுக்கு குறித்த வீடுகள் கிடைக்கவில்லை என பாதீக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பகுதியில் வெளிநாட்டு நிதி உதவியுடன் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் முயற்சியினால்  அரச காணியில் 105 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடுகள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் வசதி உள்ளவர்களும் பண பலம் கொண்டவர்களுக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கும் குறித்த வீடுகளின் திறப்பு இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளது.

-இதனால் உண்மையாக பாதீக்கப்பட்ட,கணவனை இழந்த,குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு குறித்த வீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

-பாதீக்கப்பட்ட மக்களின் தொடர் முயற்சியினால்  மன்னார் பிரதேசச் செயலகத்தினால் காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என மன்னார் பிரதேசச் செயலாளர் தெரிவித்திருந்தார்.

-எனினும் இது வரை உரிய முறையில் காணிக்கச்சேரி நடாத்தப்படவில்லை.

4 ஆவது தடவையாக இன்று                         வெள்ளிக்கிழமை (10)  மன்னார் பிரதேசச் செயலகத்தில் காணிக்கச்சேரி நடாத்துவதாக மன்னார் பிரதேசச் செயலாளரினால் உப்புக்குளத்தில் உள்ள பொது அமைப்புக்களின் ஊடாக கடிதம் அனுப்பப்ட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை காணிக்கச்சேரிக்காக சென்ற மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உப்புக்குளம் கோந்தை பிட்டில் வழங்கப்பட்டுள்ள அரச காணியானது ஏழை,வசதி குறைந்த மக்களின் குடியிறுப்பிற்காகவே வழங்கப்பட்டுள்ளது.அந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் வெளிநாட்டு நிதி உதவியில் குறித்த வீட்டுத்திட்டத்தை அப்பகுதிக்கு கொண்டு வந்தார்.

கஸ்டப்பட்ட மக்களுக்காக அமைச்சர் குறித்த வீட்டுத்திட்டங்களை கொண்டு வந்திருந்த போதும் அமைச்சருக்கு கீழ் உள்ள சிலரினால் குறித்த வீடுகள் துஸ்பிரையோகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அமைக்கப்பட்ட வீடுகள் தமது சொந்த குடும்ப உறவினர்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும்,கட்சிக்காரர்களுக்கும் குறித்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

உப்புக்களத்தில் உள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் வறுமைக்கோட்டிற்கு உற்பட்டவர்கள்.ஏதோ ஒரு கட்சியை ஆதரிப்பவர்கள்.

கட்சியை சார்ந்ததிற்கு அப்பால் மக்கள் என்ற வகையில் குறித்த வீடுகள் வழங்கப்பட்டிருந்தால் வரவேற்க வேண்டிய விடையம்.
ஆனால் தமது குடும்பம்,தமது உறவுகள் என்ற வட்டார ரீதியில் குறித்த வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

2011 ஆம் ஆண்டு முதல் காணிக்கச்சேரி நடை பெற்றது.அதன் போது சிலர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மேலும் காணிக்கச்சேரி என்ற பேரில் அரசியல் வாதிக்கு பின்னால் உள்ள சில தலைமைகள் தங்களுக்கான ஒரு பெயர் பட்டியலை தயாரித்து பிரதேசச் செயலாளரை தம் வசப்படுத்தி , அவருக்கான சில உபசரனைகளை செய்து பெயர் பட்டியலை தயாரித்து குறித்த பட்டியலை மக்கள் பார்வைக்கு  விடாது கட்டப்பட்ட வீடுகளின் திறப்புகள் இரவோடு இரவாக கள்ளத்தனமாக யாருக்கும் தெரியாமல் பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த வீடுகளில் குடி இருக்கின்றவர்கள் உண்மையில் வீடு தேவைப்பட்டவர்களா?அல்லது தற்போது வீடு கேட்டு அழைந்து திறிகின்ற இந்த மக்களுக்கு வீடு தேவையா?என்பது அனைவருக்கும் தெரியும்.

உண்மையில் பாதீக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாக மன்னார் பிரதேசச் செயலகம் ஊடாக நடாத்தப்படுகின்ற அனைத்து காணிக்கச்சேரிகளும், முறைகேடான முறையில் காணப்படுகின்றது.சுயநலத்துடன் தமது வாசிக்காக தம் பக்கம் சார்பாக உள்ளவர்களை பட்டியலிட்டு அவர்களுக்கு வீடுகளை கொடுக்கின்றார்கள்.

உண்மையில் பாதீக்கப்பட்ட மக்கலே இன்றைய தினம்(10) காணிக்கச்சேரிக்காக வருகை தந்து ஏமாந்து சென்றவர்கள்.இவர்கள் அன்றாட வாழ்வாதராத்திற்கு பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றவர்கள்.

அன்றாடம் கூலி வேளைக்குச் சென்றால் தான் அன்றைய சாப்பாடு என்ற நிலையில் இன்று இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

குறித்த காணி,வீடுகளை 3 மாதங்களுக்குள் உரிய முறையில் வழங்குவாதாக மன்னார் பிரதேசச் செயலகம் உறுதியளித்திருந்த போதும்,தாங்கள் வழங்கிய பெயர் பட்டியலை நியாயப்படுத்தும் வகையில் எங்களை பகடைக்காய்கலாக பயண்படுத்துவதாகவே நாங்கள் உணர்கின்றோம்.

-பிழையான நடவடிக்கைகளுக்காக எங்களை பயண்படுத்துவதாக நாங்கள் அஞ்சுகின்றோம்.

பிழையான நடவடிக்கை தொடருமாக இருந்தால் பாதீக்கப்பட்ட மக்களை ஒன்றினைத்து பாரிய மக்கள் புரட்சியாக குறிப்பாக கேப்பாப்புலவு பகுதியில் இடம் பெரும் போராட்டங்கள் போன்று உறுவெடுக்கும்.

-எனவே அதிகாரிகள்,அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்து வைத்து உண்மையில் பாதீக்கப்பட்ட மக்களுக்கு குறித்த வீடுகளை வழங்க,உரிய முறையில் காணிக்கச்சேரியை நடாத்தி பாதீக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

-பணபலம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த வீடுகள் பாதீக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.என மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-





மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டியில் வீடு பங்கீட்டில் முறைக்கேடு-பாதீக்கப்பட்ட முஸ்ஸீம் மக்கள் விசனம்.(படம்) Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.