அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாப்புலவில் துயில் இழக்கும் யுவதிகள்…! பரிதாபமான நிலையை யாரறிவார்?


கேப்பாப்புலவு- பிலக்குடியிருப்பு பொதுமக்களின் காணிகளை விமானப்படையினர் கையளித்துள்ள நிலையில் அங்கே பொதுமக்கள் தற்காலிகமாக குடிசைகள் அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கே தற்காலிகள் இல்லங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதினால் அக்கிராமத்து யுவதிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு இரவுகளிலும் அச்சத்துடன் தூங்கி விழிப்பதாகவும் பகலில் பெற்றோருடன் இனைந்து காணிகள் சீராக்கும் பணிகளை தொடர்வதாக குறிப்பிடுகின்றனர்.

தமது நிர்கதியான நிலமை எவருக்கும் புரியவில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் பெரும் எடுப்பில் முல்லைத்தீவு-முள்ளியவளை பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து கேப்பாப்புலவு பிரதான வீதி ஊடாக புதுக்குடியிருப்பை நோக்கி படை எடுத்தபோது குறித்த பிரதேசத்து மக்கள் சொந்த மண்னை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த இடம்பெயர்வு ஏற்படும் போது தற்பொழுது நிர்க்கதியான யுவதிகளுக்கு 12 தொடக்கம் 16 வயது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் தற்போது பாதிக்கப்படுவது போன்று எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்களா பிரதேச யுவதிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கேப்பாப்புலவில் துயில் இழக்கும் யுவதிகள்…! பரிதாபமான நிலையை யாரறிவார்? Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.