மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு-(Photos)
மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் திட்டம் இன்று (6) திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை கடற்படையின் உதவியுடன் குறித்த திட்டம் மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அப்பிரதேசத்து மக்கள் இலவசமாக பெற்று அருந்துவதன் மூலம் சிறு நீரக நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உயிர் பாதுகாக்கும் பயிற்சியான நீச்சல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றுதல் மற்றும் அடையாள அட்டை போன்றவை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், கிராம மட்டத்தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சமிந்த பிரித்திவிராஜ் வாசன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நிருபர்
(6-03-2017)
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை கடற்படையின் உதவியுடன் குறித்த திட்டம் மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அப்பிரதேசத்து மக்கள் இலவசமாக பெற்று அருந்துவதன் மூலம் சிறு நீரக நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உயிர் பாதுகாக்கும் பயிற்சியான நீச்சல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றுதல் மற்றும் அடையாள அட்டை போன்றவை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், கிராம மட்டத்தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஜனாதிபதி செயலனி சிறு நீரக நோய் தடுப்பு பிரிவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சமிந்த பிரித்திவிராஜ் வாசன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் நிருபர்
(6-03-2017)
மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு-(Photos)
Reviewed by NEWMANNAR
on
March 06, 2017
Rating:
No comments:
Post a Comment