உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்....
உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன.
குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.
மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.
கடந்த காலங்ளில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.
Electromagnetic Railgun tested at Dahlgren"s new Terminal Range
இந்நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம் (எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ள கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகை கதிகலங்க வைத்துள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்....
Reviewed by Author
on
March 25, 2017
Rating:

No comments:
Post a Comment