மொரிஷியஸ் நாட்டில் சம்பியனாக முடிசூடிய இலங்கை அணி! தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தல்
மொரிஷியஸ் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கடற்கரை கபடி தொடரின் இறுதிப்போட்டியில் ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியனாக முடிசூடியுள்ளது.
மொரிஷியஸ் நாட்டில் சர்வதேச கடற்கரை போட்டி தொடர் நடைபெற்றது, இதில், இந்தியா, இலங்கை, ஓமான் உட்பட ஆறு நாடுகள் பங்கேற்றது.
தலைநகர் போட் லொய்ஸ் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை-ஓமான் அணிகள் மோதின.
இதில் இலங்கை அணி ஓமான் அணியை வீழ்த்தி சாம்பியனாக முடிசூடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
வெற்றிப்பெற்ற இலங்கை கபடி அணிக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ், மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்கள்.
மொரிஷியஸ் நாட்டில் சம்பியனாக முடிசூடிய இலங்கை அணி! தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தல்
Reviewed by Author
on
March 22, 2017
Rating:

No comments:
Post a Comment