08 ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வரும் கிளிநொச்சி மக்கள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி 08 ஆண்டுகளாகிய போதும் சுமார் பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் எவையும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக காணிகளுக்கான உரிமைகள் இன்றியும், ஏற்கனவே மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் பிறிதொரு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் நீண்டகாலமாக குடியிருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.
மேலும், இவ்வாறு தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்கள் போதிய வசதிகள் இன்றியும், அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலை, அதிகூடிய வெப்பம் என்பவற்றால் துன்பங்களை அனுபவித்து வருவதுடன் தொற்றுநோய்களின் ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
08 ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வரும் கிளிநொச்சி மக்கள்...
Reviewed by Author
on
April 18, 2017
Rating:
Reviewed by Author
on
April 18, 2017
Rating:


No comments:
Post a Comment