47 ஆவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்....
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 47ஆவது நாளாவும் இன்று தொடர்கிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யாதவர்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
47 ஆவது நாளாகவும் வவுனியாவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்....
Reviewed by Author
on
April 11, 2017
Rating:

No comments:
Post a Comment