அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால்: இயல்புநிலை பாதிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்கள் மற்றும் மண்மீட்பு போராட்டங்கள் என்பவற்றிற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் இன்று (வியாழக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், படையினருடைய நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரச நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி வடக்கு மாகாணம் தழுவிய பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் tTdpah. நகரே வெறிச்சோடிக் காணப்படும்

இதேவேளை மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அலுவலர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ,






வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால்: இயல்புநிலை பாதிப்பு Reviewed by NEWMANNAR on April 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.