அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக தீயில் எரிந்து நாசம்

மன்னார் பஸார் பகுதியில் உள்ள சந்தை வியாபார கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து சாம்பளாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தில் நேற்று(10) திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வர்த்தக தமது வர்த்தக நிலையத்தை திறக்க வந்த போது குறித்த பல்பொருள் விற்பனை நிலையத்தினுள் இருந்து புகை வருவதை அவதானித்த நிலையில் உரிமையாளருக்கு உடனடியாக அறிவித்த நிலையில் குறித்த பல்பொருள் விற்பனை நிலை உரிமையாளர் விரைந்து வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

-பொலிஸார் விரைந்து வந்து விற்பனை நிலைய கதவை உடைத்து நீர் ஊற்றி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் குறித்த விற்பனை நிலையத்தினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து சாம்பளாகியுள்ளது.

-மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







மன்னாரில் பல்பொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக தீயில் எரிந்து நாசம் Reviewed by NEWMANNAR on April 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.