ஐரோப்பிய கராத்தே வெற்றிக் கிண்ணத்தில் சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்!
ஐரோப்பிய கராத்தே வெற்றிக் கிண்ணப் போட்டியில் ஈழத்து சிறுவன் அஸ்வின் ஞானேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
கடந்த 9ம் திகதி ரொமேனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய கராத்தே வெற்றிக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டு, இந்தப் பதக்கத்தினை அஸ்வின் பெற்றுள்ளான்.
ஈழத்து, காரை நகரைச் சேர்ந்த ஞானேஸ்வரன் தியாகராஜா, நிறைமதி ஞானேஸ்வரன் ஆகியோரின் மகனான அஸ்வின் கடந்த 9ம் திகதி நடைபெற்ற கராத்தே போட்டியில் ஸ்கொட்லான்ட் நாட்டிற்காக விளையாடியுள்ளான்.
இதில் மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கத்தினை பெற்று சாதனை படைத்துள்ளான்.
ஐரோப்பிய கராத்தே வெற்றிக் கிண்ணத்தில் சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்!
Reviewed by Author
on
April 14, 2017
Rating:

No comments:
Post a Comment