மாடியிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்: பாகிஸ்தானில் சம்பவம்...
பாகிஸ்தானில் வகுப்பறையை சுத்தம் செய்யாத குற்றத்திற்காக மாணவியை ஆசிரியர் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பள்ளியில் பஜ்ஜர் நூர் என்னும் மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி, ஆசிரியர்கள் புஷ்ரா மற்றும் ரெஹானா கூறியுள்ளனர்.
ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வேறொரு நாளில் சுத்தம் செய்வதாக பஜ்ஜர் நூர் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள் மாணவியை தாக்கியதுடன் மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடியிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்: பாகிஸ்தானில் சம்பவம்...
Reviewed by Author
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment