இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்! ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு...
இலங்கையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்த நிலைமையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, இலகுவாக நியமிக்கப்படக்கூடிய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கூட இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் பௌசியிடம் கூறியதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவற்றை அரசாங்கம் துரித கதியில் செய்து முடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளில் மந்தம்! ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு...
Reviewed by Author
on
May 26, 2017
Rating:

No comments:
Post a Comment