அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண பெண்கள் சாரணிய வருடாந்த பொது கூட்டம்...


வடமாகாண பெண்கள் சாரணிய வருடாந்த பொது கூட்டம் நேற்று(20) வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன், நல்ல தலைமைத்துவத்தை ஆண்களும், பெண்களும் இணைந்து கல்வி கற்கும் போது உருவாக்க முடியும்.

அத்துடன் அந்த கலாசாரம் இன்று மாற்றமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், பெண்கள் சாரணிய சங்கத்தலைவி அணோஜா பெர்னாண்டோ , பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண பெண்கள் சாரணிய வருடாந்த பொது கூட்டம்... Reviewed by Author on May 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.