தங்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..
வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்கள் தங்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச விவசாயிகள் மற்றும் யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகும் கிராம மக்கள் பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றுள்ளனர்.
பிரதேச செயலக வாயிலில், யானைகளின் மேய்ச்சல் நிலமாக செட்டிக்குளம் மாறினால் பொருளாதாரத்தில் எப்படி முன்னேற்றம் அடைய முடியும்.
வில்பத்து சரணாலயமா? செட்டிகுளம் சரணாலயமா? அரசே பதில் சொல், திட்டமிட்டு எமது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி எமது மக்களை பட்டினி போடாதே,
இறக்காதே இறக்காதே எமது பிரதேசத்தில் யானைகளை இறக்காதே போன்ற கோசங்களை எழுப்பியவாறு பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பிரதேச செயலக கிராம சேவை தலைமை பீட உத்தியோகஸ்தர் சு. ஞானேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்பட்ட மகஜரைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், பிரதேச செயலகத்தினால் யானை வேலி அமைப்பதற்கான பணிகள் வன ஜீவராசிகள் திணைக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்காமையினால் பிரதேச செயலக மட்டத்தில் இந்த மகஜரையும் வைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
தங்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..
Reviewed by Author
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment