முல்லை. பெருங்கடலில் இருந்து கரையேறும் கடல்பாம்புகள்!
முல்லைத்தீவு பெருங்கடலில் கடல்பாம்புகள் சில கரை ஏறுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாவட்டத்தில் தொடர்ந்து பல நாட்களாக வறட்சி நிலை ஏற்பட்ட நிலையில் தற்பொழுது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடலின் இயற்கைச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருகின்றது. அதனால் இவ்வாறு கடல்பாம்புகள் கரை ஏறுகின்றது என்று கரையோரப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு கடல்பாம்புகள் கரை ஏறுவது அரியதொரு சம்பவமாகவே தான் அறிவதாக அப்பகுதி முதியவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கரை ஏறும் பாம்புகள் மண்ணில் ஊர்ந்து செல்ல முடியாமலும் மீள கடலுக்கு செல்ல முடியாமலும் இருந்துள்ளதால் அந்தக் கடல்பாம்புகளை பிடித்து மீள கடலில் விட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லை. பெருங்கடலில் இருந்து கரையேறும் கடல்பாம்புகள்!
Reviewed by Author
on
June 28, 2017
Rating:

No comments:
Post a Comment