அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி' யின் 119 ஆவது கிளையின் 155 ஆவது நிலையம் திறந்து வைப்பு

எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி தனது 119 ஆவது கிளையின் 155 ஆவது நிலையத்தினை இன்று வியாழக்கிழமை(20) மன்னாரில் திறந்து வைத்துள்ளது.

எல். எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிரோசன் உடகே குறித்த கிளையினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது நிறைவேற்றுப்பணிப்பாளர் மார்ச் பெரேரா,சார்வமத தலைவர்கள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி மன்னார் கிளை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி தனது 119 ஆவது கிளையின் 155 ஆவது நிலையத்தினை மன்னாரில் திறந்து வைத்த நிலையில் பல்வேறு சேவைகளையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

மன்னார் கிளையின் முதலாவது நிலையான வைப்பு வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல், வாங்கள்,சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல்கள்,தங்கக்கடன் கொடுக்கல் வாங்கல்கள், லீசிங் கொடுக்கல் வாங்கல்கள் என்பன வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி,வவுனியா போன்ற கிளைகளின் ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் 'எல்.பீ.பினென்ஸ் பி.எள்.சி' யின் 119 ஆவது கிளையின் 155 ஆவது நிலையம் திறந்து வைப்பு Reviewed by NEWMANNAR on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.