முல்லைத்தீவில் 128 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான செயலணி வேலைத்திட்ட அடிப்படையில் வீடமைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றைய தினம் நீராவிப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் 128 குடும்பங்களுக்கான வீடமைப்புத்திட்டத்துக்கான 8 இலட்சம் பெறுமதியான விடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி வழங்கும் நிகழ்வில், ஒரு குடும்பத்திற்கு தலா 50,000 ருபாய் நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர், வடமாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவில் 128 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்....
Reviewed by Author
on
July 31, 2017
Rating:

No comments:
Post a Comment