மன்னார் கருசலில் பதற்றம்-இரு குழுக்களுக்கிடையில் மோதல்-நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செய்பட்ட மக்கள்- வேடிக்கை பார்த்த பொலிஸார்-(படங்கள் இணைப்பு)
தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி விவகாரத்தினை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை(6) காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
-எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியா இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு,அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
-இந்த நிலையில் நேற்று (7) வெள்ளிக்கிழமை மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உற்பட மூஸ்ஸீம்கள் சிலர் ஜீம்மா தொழுகையின் பின்னர் அணி திறண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு,அப்பகுதி மக்களை அச்சுரூத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
-எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
-மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் விட்டின் பின் புரம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.
-இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது.இதன் போது குறித்த வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சுருபமும் எரியூட்டப்பட்டுள்ளது.இதனால் கருசல் கிராம மக்கள் மத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் இருந்த போது குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறித்து கருசல் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-இதே வேளை சம்பவ இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் குறித்த பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்ததோடு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
-இதன் போது வன்முறைகளில் ஈடுபட்ட பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய மன்னார் பொலிஸாருக்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-பொலிஸார் முன்னிலையில் இடம் பெற்ற குறித்த சம்பவத்தை பொலிஸார் நேரடியாக பார்த்துள்ளதோடு ஆதரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.எனினும் இது வரை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
-இன்று சனிக்கிழமை மாலைக்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாது விட்டால் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை (9) பொலிஸருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும்,வன்முறையினை தோற்றுவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு குறித்த கிரமத்தில் அமைதி நிலை ஏற்பட பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியா இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு,அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
-இந்த நிலையில் நேற்று (7) வெள்ளிக்கிழமை மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உற்பட மூஸ்ஸீம்கள் சிலர் ஜீம்மா தொழுகையின் பின்னர் அணி திறண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு,அப்பகுதி மக்களை அச்சுரூத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
-எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
-மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் விட்டின் பின் புரம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.
-இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது.இதன் போது குறித்த வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சுருபமும் எரியூட்டப்பட்டுள்ளது.இதனால் கருசல் கிராம மக்கள் மத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் இருந்த போது குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறித்து கருசல் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-இதே வேளை சம்பவ இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் குறித்த பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்ததோடு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
-இதன் போது வன்முறைகளில் ஈடுபட்ட பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய மன்னார் பொலிஸாருக்கு வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
-பொலிஸார் முன்னிலையில் இடம் பெற்ற குறித்த சம்பவத்தை பொலிஸார் நேரடியாக பார்த்துள்ளதோடு ஆதரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.எனினும் இது வரை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
-இன்று சனிக்கிழமை மாலைக்குள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாது விட்டால் மறு நாள் ஞாயிற்றுக்கிழமை (9) பொலிஸருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும்,வன்முறையினை தோற்றுவித்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு குறித்த கிரமத்தில் அமைதி நிலை ஏற்பட பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் கருசலில் பதற்றம்-இரு குழுக்களுக்கிடையில் மோதல்-நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செய்பட்ட மக்கள்- வேடிக்கை பார்த்த பொலிஸார்-(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment