மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் ஒரேநாளில் மூன்று பாடசாலைகளுக்கு விஜயம்…..
மன்னார் மண்ணில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தம்மால் இயன்றளவு உதவிகளை சேவையாக செய்து வரும் அமைப்பான மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தங்களின் சேவையின் அடுத்த பகுதியாக 13-07-2017 அன்று வியாழக்கிழமை மூன்று பாடசாலைகளுக்கு.......
- மன்.திருக்கேதீஸ்ச்சரம் கௌரியம்பாள் அ.த.க.பாடசாலை
- மன்.எழுத்தூர்.றோ.க.த.க.பாடசாலை
- மன்.தாராபுரம் அல்.மினா மகா வித்தியாலயம்.
(பாடசாலைமாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு பாடசாலைகளில் உள்ள நூலகங்களின் பங்களிப்பு அளப்பரியது அப்படியான நல்ல நூலகங்களை உருவாக்கி தரமான நூல்களை வழங்கி மாணவர்களின் கல்விக்கு துணையிருப்போம் நாம் சென்ற மூன்று பாடசாலைகளிலும் நூலகம் குறைவான வளங்களோடும் வசதியற்றும் உள்ளதை காணமுடிகின்றது கவலைக்குரிய விடையமே…..)
பெறுமதியான ஆங்கிலமொழி நூல்தொகுதிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தவர்கள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மன்னார் கிளை மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டமானது தனது சேவையினை தொடர்ச்சியாக செயலாற்றுவதற்கு பங்காற்றும் அத்தனை உறுப்பினர்களும் நலன்விரும்பிகளையும் நல்லுங்களையும் நினைவில் கொள்கின்றோம்…
எம்மோடு சேர்ந்து பொதுக்கல்விப்பணியாற்ற நல்லுங்களை எதிர்பார்கின்றோம்….வரவேற்கின்றோம்.

மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் ஒரேநாளில் மூன்று பாடசாலைகளுக்கு விஜயம்…..
Reviewed by Author
on
July 14, 2017
Rating:

No comments:
Post a Comment