பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி: அச்சத்தில் பொதுமக்கள்....
அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த ஆட்டுக்குட்டியின் கண்களும், முகமும் வினோதமாகவும், பாதி மனிதனை போலவும் பயங்கரமாக இருந்துள்ளது.
இதனை கண்ட மக்கள், பிசாசு என்று அச்சமடைந்துள்ளனர். இந்த ஆட்டுக்குட்டி பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. அதன் புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி: அச்சத்தில் பொதுமக்கள்....
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment