அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கு மக்களினால் மூவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு

மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கு மக்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை திருப்பலியின் பின் விசேட வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஆலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

-இதன் போது சிறந்த சமூக சேவையினை மேற்கொண்டு வரும் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், விளையாட்டுத்துறையில் மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை சேர்ந்து இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஞா.டேவிட்சன் ஜெறாட் மற்றும் மன்னார் மாவட்டத்தில் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கு மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கு மக்களினால் கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டதோடு,நினைவுச்சின் னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

-குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை, ஆலய நிர்வாக சபையினர்,இளைஞர் ஒன்றிய பிரதி நிதிகள்,மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது






மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளி பங்கு மக்களினால் மூவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.