ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வர அப்பா: ஏழையாக வாழும் மகன்....
கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செயல்படும் ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியா.
இவர் நிறுவனத்தின் மதிப்பு 6000 கோடி ரூபாயாகும், இதோடு கணேஷ்ராம் வைர வியாபாரமும் செய்து வருகிறார்.
இவரின் மூத்த மகன் திராவ்யா தோலக்கியா (21) கடந்த ஆண்டு தந்தையின் உத்தரவை ஏற்று ஒரு மாதம் பல்வேறு கடைகளில் வேலை செய்து, சொற்ப வாடகை கொண்ட அறையில் ஏழை மக்களுடன் தங்கி பல்வேறு அனுபவங்களை பெற்றார்.
அதே போல கணேஷ்ராமின் இளைய மகன் ஹிதார் தோலாக்கியாவும் ஒரு மாதம் ஏழையாக வாழ்ந்து பார்த்துள்ளார்.
ஐதராபாத்துக்கு விமானம் மூலம் வந்த ஹிதார், அங்கிருந்து பேருந்து மூலம் செகந்திராபாத்திற்கு சென்றார்.
அங்கு 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றினார்.
அதன் பின்னர், அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஹிதார் சில நாட்கள் ரிக்க்ஷா தொழிலாளிகள் மற்றும் சாமியாருடன் ஒன்றாக தங்கினார்
ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், ஏழை மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டதோடு ஏராளமான அனுபவங்களை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வர அப்பா: ஏழையாக வாழும் மகன்....
Reviewed by Author
on
August 14, 2017
Rating:

No comments:
Post a Comment