சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுவர் நோயாளர் விடுதி திறந்து வைப்பு-(படம்)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுவர் நோயாளர் விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று புதன் கிழமை(30) வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உமவியும்,யுனிசெப் அமைப்பினூடாக சுமார் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குறித்த சிறுவர் நோயாளர் விடுதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனுடன் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதி மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதி நிதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி,மன்னார் உதவி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில்றோய் பீரிஸ்,முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











சிலாபத்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுவர் நோயாளர் விடுதி திறந்து வைப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
August 30, 2017
Rating:

No comments:
Post a Comment