தென் ஆப்பிரிக்காவில் 8 தங்கம் வென்று சாதித்த தமிழச்சிக்கு அங்கீகாரம்......
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பழு தூக்கும் போட்டியில் தமிழக வீராங்கனை நிவேதா 8 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 19-வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் பழு தூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா பங்கேற்றார்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற இவர் 8 தங்கப்பதங்களை அள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் பழு தூக்கும் போட்டியில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறேன்.
தமிழக அரசு இதற்கான அங்கீகாரம் எதையும் அளிக்கவில்லை. அரசு உதவி செய்தால் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார். நிவேதா தமிழகத்தின் சேலம் மாவட்டம் பெரியபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் 8 தங்கம் வென்று சாதித்த தமிழச்சிக்கு அங்கீகாரம்......
Reviewed by Author
on
September 30, 2017
Rating:

No comments:
Post a Comment