அண்மைய செய்திகள்

recent
-

சிங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு


சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Asia Fighting Championship (AFC) நிகழ்வில் இடம்பெறுவதற்காக சிங்கப்பூரில் நேற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் பிரபலமான வீரரான ஸ்டீவன் லிம் என்பவர் பங்கேற்க இவரை எதிர்த்து தமிழரான பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார்.

போட்டி தொடங்கியதும் ஒருவரை தாக்கிகொண்டனர். அப்போது, பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். பிரதீப்பை மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுக் குறித்து விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் பேசியபோது, ‘விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் விலகி கொண்டதால் குறுகிய காலத்தில் அந்த இடத்தில் பிரதீப் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பிரதீப்பிற்கு அவரை எதிர்த்து சண்டையிட்ட ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரதீப்பின் விரிவான பிரேத பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சிங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு Reviewed by Author on September 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.