"ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள்
"ஈழத் தமிழர்களின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கு அவர்களது ஒற்றுமையீனமே முக் கிய காரணமெனக் கூற முடியும். ஈழத் தமிழர்கள் அரசியலில் மட்டுமல்லாது வேறெந்தவொரு விடயத்திலும் ஒற்றுமையாகச் செயற்பட்டதாக வரலாறு கிடையாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது முதுமொழி.
நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்ரீதியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதிலேயே இவர்களின் காலம் கழிந்தது. மக்களும் அரசியல் தலைவர்களை நம்பினரே தவிர, தமது எதிர்காலம் தொடர்பாகச்நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்ரீதியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதிலேயே இவர்களின் காலம் கழிந்தது.
மக்களும் அரசியல் தலைவர்களை நம்பினரே தவிர, தமது எதிர்காலம் தொடர்பாகச் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
ஆயுதப் போராளிகள் மத்தியிலும் ஒற்றுமை இருக்கவில்லை
அரசியல் கட்சிகள் ஓரம் கட்டப்பட்டு, ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், ஒற்றுமையுணர்வை அங்கும் காண முடியவில்லை. தமிழ் இளைஞர்கள் பல தரப்புக்க ளாக இயங்கினர். இவர்களது நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும், அவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை. பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டிய இவர்கள், தமக்குள்ளும் முட்டி மோதிக்கொண்டனர்.இதைவிடக் காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களும் இணைந்து போராட்டங்களை நலிவுறச்செய்து விட்டன.
அன்றைய நாள்களில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய கட்டப்பொம்மனும், பண்டாரவன்னியனும், எட்டப்பனாலும், காக்கை வன்னியனாலும் காட்டிக்கொடுக்கப்பட்டனர். ஈழத்தமிழர்களின் போராட்டத்திலும் இத்தகைய துரோகங்களுக்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் குறைவிருக்கவில்லை.</p>
<p>ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடியவர்களும் இங்கு இருக்கத்தான் செய்தனர். தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை இவர்கள் மனதில் கொண்டார்களேயொழிய முழுத் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியும் அவமானமும் அது வென்பதை அவர்கள் உணர வில்லை.தோற்கடிக்கப்பட்டவர் களாகப் பார்க்கப்படும் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகவே மற்றவர்களால் நோக்கப்படுகின்றனர். ஒரு காலத்தில் வீரத்துக்கும், தியாகத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்டவர்கள், இன்று மற்றவர்களின் பார்வையில் பரிதாபத்துக்குரியவர்களாகத் தோன்றுகின்றனர்.
இந்த இழிநிலை மாறுவதற்கான அறிகுறி தென்படுவதாக இல்லை.ஆனால் இன்றும் இங்கு நடப்பதென்ன? எம்மவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் மீண்டும் பழைய பல்லவியைப் பாடுகின்றனர். மாகாண சபைக்குள் குழப்பம், கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு, பதவிக்கான போராட்டங்கள், பதவிகளைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல்வாதிகள்,தறிகெட்டுத் திரிகின்ற இளைஞர்களின் அடாவடித்தனங்கள், மதுவிலும் போதைப்பொருள்களிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்துக்கு உதவாத பேர்வழிகள், பெண்களுக்கு அச்சமானதொரு சூழ்நிலை, கலை கலாசாரத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் போன்ற இவற்றைத்தான் போருக்குப் பின்னரான எமது அறுவடைகளாகக் காண முடிகின்றது.
உலகில் 11 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர் எனக் கூறுகின்றார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஏழுகோடிப்போர் வாழ்கின்றனர். தமிழ்நாடு எமது மூதாதையரின் தொன்மை வாய்ந்த பூமியாகும். அºருந்து வந்து இலங்கையில் குடியமர்ந்த நாம் எமக்கெனத் தனியான பண்பாட்டுக் கோலங் களைக் கொண்டுள்ளோம்.
இதைவிட வாழ்க்கை முறைகளிலும் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிளவுபட்டு நிற்பதில் மட்டுமே ஒற்றுமையைக் காண்பிக்கின்றனர். தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை எள்ளிநகையாடக் கூடிய அளவுக்கு கீழிறங்கிப் போய்விட்டது. மக்கள் பிரதி நிதிகள் எனக் கூறிக்கொள்வோர் மக்களை மதிக்காமல் தமது எண்ணம் போன்று செயற்படுகின்றனர் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்ற வடக்கு மாகாணசபையில்கூட, மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வடக்கு மாகாணசபையில், ஆளும் தரப்பினர் பிளவுபட்டு நிற்கின்ற னர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள்கூட்டமைப்பினால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், கூட்ட மைப்பின் தலைமைக்கு மதிப்புக் கொடுப்பதற்கு தயங்கி நிற்கின்றார். மாகாணசபையில் எல்லாமே தாமென்ற இறுமாப்பு அவரிடம் காணப்படுகின்றது.
அவரது செயற்பாடு களால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர். சரி பாதிப் போர் முதலமைச்சருக்கு ஆதரவாகவும், மீதிப்பேர் எதிராகவும் நடந்து கொள்கின்றனர். கூட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டமை தொடர்பாக முதலமைச்சர் சிறிதும் கவலைப்படவில்லை. தமது பதவியைக் காப்பாற்றுவதிலேயே அவர் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றார்.
ஏகப்பட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கின்றோம். ஆனால் எமது பிரதிநிதிகள் விழிப்புடன் உள்ளார்களா என்று தோன்ற வில்லை.தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் படிப்படியாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் கூட இவர்கள் விழித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்போது விழிப்பு வராதவர்களுக்கு ஒருபோதுமே அது வரச் சாத்தியமில்லை. தமிழரின் தலைவிதி இதுவென்றால் எவர்தான் என்ன செய்ய முடியும்?
நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்ரீதியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதிலேயே இவர்களின் காலம் கழிந்தது. மக்களும் அரசியல் தலைவர்களை நம்பினரே தவிர, தமது எதிர்காலம் தொடர்பாகச்நாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியல்ரீதியில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதிலேயே இவர்களின் காலம் கழிந்தது.
மக்களும் அரசியல் தலைவர்களை நம்பினரே தவிர, தமது எதிர்காலம் தொடர்பாகச் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
ஆயுதப் போராளிகள் மத்தியிலும் ஒற்றுமை இருக்கவில்லை
அரசியல் கட்சிகள் ஓரம் கட்டப்பட்டு, ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், ஒற்றுமையுணர்வை அங்கும் காண முடியவில்லை. தமிழ் இளைஞர்கள் பல தரப்புக்க ளாக இயங்கினர். இவர்களது நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும், அவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை. பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டிய இவர்கள், தமக்குள்ளும் முட்டி மோதிக்கொண்டனர்.இதைவிடக் காட்டிக்கொடுப்புகளும், துரோகங்களும் இணைந்து போராட்டங்களை நலிவுறச்செய்து விட்டன.
அன்றைய நாள்களில் வெள்ளையருக்கு எதிராகப் போராடிய கட்டப்பொம்மனும், பண்டாரவன்னியனும், எட்டப்பனாலும், காக்கை வன்னியனாலும் காட்டிக்கொடுக்கப்பட்டனர். ஈழத்தமிழர்களின் போராட்டத்திலும் இத்தகைய துரோகங்களுக்கும், காட்டிக்கொடுப்புக்களுக்கும் குறைவிருக்கவில்லை.</p>
<p>ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடியவர்களும் இங்கு இருக்கத்தான் செய்தனர். தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை இவர்கள் மனதில் கொண்டார்களேயொழிய முழுத் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியும் அவமானமும் அது வென்பதை அவர்கள் உணர வில்லை.தோற்கடிக்கப்பட்டவர் களாகப் பார்க்கப்படும் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகவே மற்றவர்களால் நோக்கப்படுகின்றனர். ஒரு காலத்தில் வீரத்துக்கும், தியாகத்துக்கும் அடையாளமாகக் கருதப்பட்டவர்கள், இன்று மற்றவர்களின் பார்வையில் பரிதாபத்துக்குரியவர்களாகத் தோன்றுகின்றனர்.
இந்த இழிநிலை மாறுவதற்கான அறிகுறி தென்படுவதாக இல்லை.ஆனால் இன்றும் இங்கு நடப்பதென்ன? எம்மவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் மீண்டும் பழைய பல்லவியைப் பாடுகின்றனர். மாகாண சபைக்குள் குழப்பம், கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு, பதவிக்கான போராட்டங்கள், பதவிகளைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகள், மக்களைப் பற்றிச் சிந்திக்காத அரசியல்வாதிகள்,தறிகெட்டுத் திரிகின்ற இளைஞர்களின் அடாவடித்தனங்கள், மதுவிலும் போதைப்பொருள்களிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்துக்கு உதவாத பேர்வழிகள், பெண்களுக்கு அச்சமானதொரு சூழ்நிலை, கலை கலாசாரத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் போன்ற இவற்றைத்தான் போருக்குப் பின்னரான எமது அறுவடைகளாகக் காண முடிகின்றது.
உலகில் 11 கோடி தமிழர்கள் வாழ்கின்றனர் எனக் கூறுகின்றார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஏழுகோடிப்போர் வாழ்கின்றனர். தமிழ்நாடு எமது மூதாதையரின் தொன்மை வாய்ந்த பூமியாகும். அºருந்து வந்து இலங்கையில் குடியமர்ந்த நாம் எமக்கெனத் தனியான பண்பாட்டுக் கோலங் களைக் கொண்டுள்ளோம்.
இதைவிட வாழ்க்கை முறைகளிலும் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிளவுபட்டு நிற்பதில் மட்டுமே ஒற்றுமையைக் காண்பிக்கின்றனர். தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை எள்ளிநகையாடக் கூடிய அளவுக்கு கீழிறங்கிப் போய்விட்டது. மக்கள் பிரதி நிதிகள் எனக் கூறிக்கொள்வோர் மக்களை மதிக்காமல் தமது எண்ணம் போன்று செயற்படுகின்றனர் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்ற வடக்கு மாகாணசபையில்கூட, மாகாணசபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வடக்கு மாகாணசபையில், ஆளும் தரப்பினர் பிளவுபட்டு நிற்கின்ற னர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள்கூட்டமைப்பினால் முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், கூட்ட மைப்பின் தலைமைக்கு மதிப்புக் கொடுப்பதற்கு தயங்கி நிற்கின்றார். மாகாணசபையில் எல்லாமே தாமென்ற இறுமாப்பு அவரிடம் காணப்படுகின்றது.
அவரது செயற்பாடு களால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயற்படுகின்றனர். சரி பாதிப் போர் முதலமைச்சருக்கு ஆதரவாகவும், மீதிப்பேர் எதிராகவும் நடந்து கொள்கின்றனர். கூட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டமை தொடர்பாக முதலமைச்சர் சிறிதும் கவலைப்படவில்லை. தமது பதவியைக் காப்பாற்றுவதிலேயே அவர் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகின்றார்.
ஏகப்பட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கின்றோம். ஆனால் எமது பிரதிநிதிகள் விழிப்புடன் உள்ளார்களா என்று தோன்ற வில்லை.தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் படிப்படியாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் கூட இவர்கள் விழித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்போது விழிப்பு வராதவர்களுக்கு ஒருபோதுமே அது வரச் சாத்தியமில்லை. தமிழரின் தலைவிதி இதுவென்றால் எவர்தான் என்ன செய்ய முடியும்?
"ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள்
Reviewed by Author
on
September 30, 2017
Rating:

No comments:
Post a Comment