அண்மைய செய்திகள்

recent
-

"ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள்

 "ஈழத் தமி­ழர்­க­ளின் இன்­றைய பரி­தா­ப­க­ர­மான நிலைக்கு அவர்களது ஒற்­று­மை­யீ­னமே முக் கிய கார­ண­மெ­னக் கூற முடி­யும். ஈழத் தமி­ழர்­கள் அர­சி­ய­லில் மட்­டு­மல்­லாது வேறெந்­த­வொரு விட­யத்­தி­லும் ஒற்­று­மை­யா­கச் செயற்­பட்­டதாக வரலாறு கிடை­யாது. ஒன்­று­பட்­டால் உண்டு வாழ்வு என்பது முதுமொழி. 

நாட்­டின் சுதந்­தி­ரத்­துக்­குப் பின்­னர் அர­சி­யல்­ரீ­தி­யில் ஒன்­று­பட்­டுத் தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டி­யி­ருந்­தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தூற்­றிக்­கொள்­வதி­லேயே இவர்­க­ளின் காலம் கழிந்­தது. மக்­க­ளும் அர­சி­யல் தலை­வர்­களை நம்பி­னரே தவிர, தமது எதிர்­கா­லம் தொடர்­பா­கச்நாட்­டின் சுதந்­தி­ரத்­துக்­குப் பின்­னர் அர­சி­யல்­ரீ­தி­யில் ஒன்­று­பட்­டுத் தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டி­யி­ருந்­தால் , அவற்றை இலகுவாக ஈட்டியிருக்க முடியும். ஆனால் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தூற்­றிக்­கொள்­வதி­லேயே இவர்­க­ளின் காலம் கழிந்­தது.

மக்­க­ளும் அர­சி­யல் தலை­வர்­களை நம்பி­னரே தவிர, தமது எதிர்­கா­லம் தொடர்­பா­கச் சிந்­திக்­கத் தவ­றி­விட்­ட­னர்.
ஆயு­தப் போரா­ளி­கள் மத்­தி­யி­லும் ஒற்­றுமை இருக்­க­வில்லை

அர­சி­யல் கட்­சி­கள் ஓரம் கட்­டப்­பட்டு, ஆயு­தப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போ­தி­லும், ஒற்­று­மை­யு­ணர்வை அங்­கும் காண முடி­ய­வில்லை. தமிழ் இளை­ஞர்­கள் பல தரப்புக்க ளாக இயங்கினர். இவர்­க­ளது நோக்­கம் ஒன்­றாக இருந்த போதி­லும், அவர்­க­ளால் ஒற்­று­மை­யா­கச் செயற்­பட முடி­ய­வில்லை. பொது எதி­ரிக்கு எதி­ரா­கப் போராட வேண்­டிய இவர்­கள், தமக்­குள்ளும் முட்டி மோதிக்­கொண்­டனர்.இதை­வி­டக் காட்­டிக்­கொ­டுப்­பு­க­ளும், துரோ­கங்களும் இணைந்து போராட்­டங்­களை நலி­வு­றச்­செய்­து­ விட்­டன.


அன்­றைய நாள்­க­ளில் வெள்­ளை­ய­ருக்கு எதி­ரா­கப் போரா­டிய கட்­டப்­பொம்­ம­னும், பண்­டா­ர­வன்­னி­ய­னும், எட்­டப்­ப­னா­லும், காக்கை வன்­னி­ய­னா­லும் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­ட­னர். ஈழத்­த­மி­ழர்­க­ளின் போராட்­டத்­தி­லும் இத்­த­கைய துரோ­கங்­க­ளுக்­கும், காட்­டிக்­கொ­டுப்­புக்­க­ளுக்­கும் குறை­வி­ருக்­க­வில்லை.</p>
<p>ஈழப்­போ­ரில் விடு­த­லைப் புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தைக் கொண்­டா­டி­ய­வர்­க­ளும் இங்கு இருக்­கத்­தான் செய்­த­னர். தமது சொந்த விருப்பு வெறுப்­புக்­களை இவர்­கள் மன­தில் கொண்­டார்­க­ளே­யொ­ழிய முழுத் தமிழ் இனத்­துக்­கும் ஏற்­பட்ட மிகப்­பெ­ரிய தோல்­வி­யும் அவ­மா­ன­மும் அது­ வென்­பதை அவர்­கள் உணர வில்லை.தோற்­க­டிக்­கப்­பட்­ட­வர் க­ளா­கப் பார்க்­கப்­ப­டும் ஈழத் தமி­ழர்­கள் ஈழத் தமி­ழர்­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே மற்­ற­வர்­க­ளால் நோக்­கப்­ப­டு­கின்­ற­னர். ஒரு காலத்­தில் வீரத்­துக்­கும், தியா­கத்­துக்­கும் அடை­யா­ள­மா­கக் கரு­தப்­பட்­ட­வர்­கள், இன்று மற்­ற­வர்­க­ளின் பார்­வை­யில் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­வர்­க­ளா­கத் தோன்றுகின்றனர்.

இந்த இழி­நிலை மாறு­வ­தற்­கான அறி­கு­றி தென்படுவதாக இல்லை.ஆனால் இன்­றும் இங்கு நடப்­ப­தென்ன? எம்­ம­வர்­கள் சுய­நி­னைவை இழந்த நிலை­யில் மீண்­டும் பழைய பல்­ல­வி­யைப் பாடு­கின்­ற­னர். மாகாண சபைக்­குள் குழப்­பம், கூட்­ட­மைப்­புக்­குள் கொந்­த­ளிப்பு, பத­விக்­கான போராட்­டங்­கள், பத­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி ஊழ­லில் ஈடு­ப­டு­கின்ற மக்­கள் பிர­தி­நி­தி­கள், மக்­க­ளைப் பற்­றிச் சிந்­திக்­காத அர­சி­யல்­வா­தி­கள்,தறி­கெட்­டுத் திரி­கின்ற இளை­ஞர்­க­ளின் அடா­வ­டித்­த­னங்­கள், மது­வி­லும் போதைப்­பொ­ருள்­க­ளி­லும் மூழ்­கிக் கிடக்­கும் சமு­தா­யத்­துக்கு உத­வாத பேர்­வ­ழி­கள், பெண்­க­ளுக்கு அச்­ச­மா­ன­தொரு சூழ்­நிலை, கலை கலா­சா­ரத்­துக்கு ஒவ்­வாத செயற்பா­டு­கள் போன்ற இவற்­றைத்­தான் போருக்­குப் பின்­ன­ரான எமது அறு­வ­டை­க­ளா­கக் காண முடி­கின்­றது.

உல­கில் 11 கோடி தமி­ழர்­கள் வாழ்கின்றனர் எனக் கூறு­கின்றார்கள். இதில் தமிழ்­நாட்­டில் மட்­டும் ஏழு­கோ­டிப்­போர் வாழ்­கின்­ற­னர். தமிழ்­நாடு எமது மூதா­தை­ய­ரின் தொன்மை வாய்ந்த பூமி­யா­கும். அº­ருந்து வந்து இலங்­கை­யில் குடி­ய­மர்ந்த நாம் எமக்­கெ­னத் தனி­யான பண்­பாட்­டுக் கோ­லங் களைக் கொண்டுள்ளோம்.

இதை­விட வாழ்க்கை முறை­க­ளி­லும் ஈழத் தமி­ழர்­க­ளும், தமிழ் நாட்­டுத் தமி­ழர்­க­ளும் வேறு­பாட்­டைக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பிள­வு­பட்டு நிற்­ப­தில் மட்­டுமே ஒற்­று­மை­யைக் காண்­பிக்­கின்­ற­னர். தமிழ் நாட்­டின் இன்­றைய அர­சி­யல் நிலைமை எள்­ளி­ந­கை­யா­டக் கூடிய அள­வுக்கு கீழி­றங்­கிப் போய்­விட்­டது. மக்­கள் பிர­தி நி­தி­கள் எனக் கூறிக்­கொள்­வோர் மக்­களை மதிக்­கா­மல் தமது எண்­ணம் போன்று செயற்­ப­டு­கின்­ற­னர் ஜன­நா­ய­கத்தை இழி­வு­ப­டுத்­து­கின்ற வடக்கு மாகா­ண­ச­பை­யில்­கூட, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருக்­கின்ற வடக்கு மாகா­ண­ச­பை­யில், ஆளும் தரப்­பி­னர் பிள­வு­பட்டு நிற்­கின்­ற­ னர்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் கருத்து முரண்­பா­டு­கள்கூட்­ட­மைப்­பி­னால் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தப்­பட்ட சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கூட்­ட­ மைப்­பின் தலை­மைக்கு மதிப்­புக் கொடுப்­ப­தற்கு தயங்கி நிற்­கின்றார். மாகா­ண­ச­பை­யில் எல்­லாமே தாமென்ற இறு­மாப்பு அவ­ரி­டம் காணப்­ப­டு­கின்­றது.

அவ­ரது செயற்பாடு களால் ஆளும்­கட்சி உறுப்­பி­னர்­கள் இரண்டு பிரி­வு­க­ளா­கப் பிரிந்து செயற்­ப­டு­கின்­ற­னர். சரி பாதிப் போர் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வா­க­வும், மீதிப்­பேர் எதி­ரா­க­வும் நடந்து கொள்­கின்­ற­னர். கூட்­ட­மைப்­பில் விரி­சல் ஏற்­பட்­டமை தொடர்­பாக முத­ல­மைச்சர் சிறி­தும் கவ­லைப்­ப­ட­வில்லை. தமது பத­வி­யைக் காப்­பாற்­று­வ­தி­லேயே அவர் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்.
ஏகப்பட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கின்றோம். ஆனால் எமது பிரதிநிதிகள் விழிப்புடன் உள்ளார்களா என்று தோன்ற வில்லை.தமிழ் மக்­க­ளது பூர்­வீக நிலங்­கள் படிப்­ப­டி­யா­கப் பறி­போய்க் கொண்­டி­ருக்­கின்­றன.இந்த நிலை­யில் கூட இவர்­கள் விழித்­துக்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இப்­போது விழிப்பு வரா­த­வர்­க­ளுக்கு ஒரு­போ­துமே அது வரச் சாத்­தி­யமில்லை. தமி­ழ­ரின் தலை­விதி இது­வென்­றால் எவர்­தான் என்ன செய்ய முடி­யும்?


"ஒற்றுமை இழந்து அவலப்படுகின்றனர் ஈழத்தமிழர்கள் Reviewed by Author on September 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.