பிரான்சில் தமிழ் பேசும் மாணவ- மாணவிகளுக்காக நடைபெற்ற ஆங்கில அறிவுப் போட்டி 2017
கடந்த வருடம் போன்று இந்த வருடமும் நடைபெற்ற ஆங்கில அறிவு போட்டியானது பாரிஸ் மாநகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆங்கில பாட பிரிவினர், ஐரோப்பாவிலேயே முதன்முறையாக ஆங்கில அறிவிப்போட்டியாகிய Thumbs Up English Challenge இனை இரண்டாவது வருட மாகவும் மிக விமரிசையாக 24/09/2017 அன்று காலை 09:00 மணி அளவில், இரண்டு அமெரிக்க ஆங்கில பேராசிரியர்களான Ms.Catherine Kospitto அவர்கள் முன்நிலையிலும், Ms,Maddy முன்னிலையிலும் நடத்தியுள்ளார்கள்.
75 மாணவ/மாணவிகளை கொண்ட குழுவானது வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே,
- Elementary (18 மாதம் - 6 வயது),
- Start Of Beginners (7 - 9 வயது),
- Beginners (10 - 12 வயது),
- Intermediate (13 - 15 வயது)
- Upper Intermediate (16 - 21 வயது) ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
மேலும் பலவகைப் போட்டிகள், அதாவது Rhymes, Recitation, Spell Bee, Punctuation writing , Comprehension Writing, Dictation, Speech, on the spot speech, Show and tell , skit போன்றவை நடைபெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள், பதங்கங்கள், சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.
அதுமட்டும் இல்லாமல் எங்களுடைய இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த விளம்பரதாரர்களான LANKASRI E-MARKET , Salle 5p Star உரிமையாளர் பிரின்ஸ் மரியநாயகம், Point Propre உரிமையாளர் சின்னையா தெய்வேந்திரன்.Samithiriya Bridal Service உரிமையாளர் ஆஷா ராபின்சன் மற்றும் அணைத்து நண்பர்கள் , நலன்விரும்பிகள் எல்லோருக்கும் சுருதிலயா கலைக்கல்லூரி ஆங்கில பிரிவு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
ஏற்கனவே இசைத்துறையில் பல திறமைமிக்க மாணவர்களை உருவாக்கிவரும் சுருதிலயா கல்லூரி இப்போது ஆங்கிலக் கல்வியிலும் ஆழ காலூன்றியிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
தானியா ஜென்சி ஜூட் றிஷான் சுருதிலயா கல்லூரி (ஆங்கில பாட பிரிவு )
பிரான்சில் தமிழ் பேசும் மாணவ- மாணவிகளுக்காக நடைபெற்ற ஆங்கில அறிவுப் போட்டி 2017
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment