அண்மைய செய்திகள்

recent
-

சிறுநீரக தானம் இந்த ஆண்டில் 75 சதவீதத்தால் அதிகரிப்பு -


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சிறுநீரக தானம் 75 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுநீரக கூழ்மபிரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.குறித்த சிறுநீரகங்கள் மூலைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு 6 சீரநீரகங்கள் தானமாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 19 சிறுநீரகங்கள் தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னர் போல அல்லாமல் உடலுறுப்புக்களை தானமாக வழங்குவது குறித்து மக்கள் தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அதிகளவான சிறுநீரகங்களை தானமாக பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த உடலுறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சிறுநீரக தானம் இந்த ஆண்டில் 75 சதவீதத்தால் அதிகரிப்பு - Reviewed by Author on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.