யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு-
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று வெள்ளிக்கிழமை(27) சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
-குறித்த தகவலினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உறுதிப்படுத்தியுள்ளார்.
-அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
-கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 நோயாளர்களினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட நிபுனர் ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குறிய குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மதியம் சீல் வைத்து மூடியுள்ளனர்.
-கொழும்பில் இருந்து விசேட நிபுனர் குழு யாழ்ப்பாணம் சென்று விசாரனைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நியூ மன்னார் இவ் தனியார் வைத்திய சாலை தொடர்ப்பாக வெளியிட்ட செய்தி
மன்னார் சு.சூசைப்பிள்ளை அவர்களுக்கும் பாதிப்பு...கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10நோயாளர்கள் தீவிர கிருமி தொற்று...
-குறித்த தகவலினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உறுதிப்படுத்தியுள்ளார்.
-அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
-கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 நோயாளர்களினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட நிபுனர் ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குறிய குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மதியம் சீல் வைத்து மூடியுள்ளனர்.
-கொழும்பில் இருந்து விசேட நிபுனர் குழு யாழ்ப்பாணம் சென்று விசாரனைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நியூ மன்னார் இவ் தனியார் வைத்திய சாலை தொடர்ப்பாக வெளியிட்ட செய்தி
மன்னார் சு.சூசைப்பிள்ளை அவர்களுக்கும் பாதிப்பு...கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10நோயாளர்கள் தீவிர கிருமி தொற்று...
யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு-
Reviewed by NEWMANNAR
on
October 28, 2017
Rating:

No comments:
Post a Comment