உலகின் முதலாவது தானியங்கி புகையிரதம் சேவையை ஆரம்பித்தது
சாரதி இன்றி இயங்கும் கார்களை வடிவமைக்கும் முயற்சிகள் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் ஆராய்ச்சிகள் தொடர்பான பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.
இவ்வாறிருக்கையில் எவ்வித பரபரப்பும் இன்றி உலகின் முதலாவது தானியங்கி புகையிரதம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவிலேயே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த புகையிரதத்தினை Rio Tinto நிறுவனம் உருவாக்கியுள்ளது.
எதிர்வரும் 2018ம் ஆண்டு தானியங்கி புகையிரதத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. ஆனால் அவுஸ்திரேலியா முந்திக்கொண்டு அறிமுகம் செய்துள்ளது. இப் புகையிரதம் தானாகவே சுமார் 100 கிலோ மீற்றர்கள் தூரம் இயக்குபவர்கள் இன்றி பயணம் செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதலாவது தானியங்கி புகையிரதம் சேவையை ஆரம்பித்தது
Reviewed by Author
on
October 08, 2017
Rating:

No comments:
Post a Comment