கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் திடீரென மரணம் -
பல வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊர் யாழ். சுன்னாகத்திற்குத் திரும்பிய முதியவரொருவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று(29) தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வந்த குறித்த முதியவர் கடந்த பத்து நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான சுன்னாகத்துக்குத் திரும்பியிருந்தார்.
உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வந்த குறித்த முதியவர் திடீரென ஏற்பட்டுள்ள நெஞ்சு வலி காரணமாக நேற்றைய தினம்(28) உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் தியாகராஜா(வயது-86) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் திடீரென மரணம் -
Reviewed by Author
on
October 30, 2017
Rating:

No comments:
Post a Comment