அண்மைய செய்திகள்

recent
-

வட,கிழக்கில் என்ன நடக்கிறது? புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை


வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசிய புலனாய்வு பிரிவினால் இரகசிய அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குறித்த மாகாணங்களில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் அரசியல் கட்சி, அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் செயற்படும் முறை, அவர்களின் எதிர்கால திட்டங்களும் அந்த அறிக்கையில் உள்ளதாக அறிந்து கொள்ள முடிந்துள்ளது.
தேசிய ஒற்றுமைக்கு தடை ஏற்படும் முறை மற்றும் சம்பவங்கள் தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்துமாறு புலனாய்வு பிரிவுகளுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகளுடன் தெற்கு அரசியல்வாதிகள் செயற்படும் முறை, அவர்களுடன் அரசியல் உறவு தொடர்பிலும் புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு சபைக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வட,கிழக்கில் என்ன நடக்கிறது? புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை Reviewed by Author on October 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.