மக்களின் காணிகளை இராணுவம் சூறையாடியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
சர்வதேச நாடுகளிடம் நாங்கள் இன்றைக்கு அரசியல் தீர்வு திட்டத்தில் ஏமாற்றம் அடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா. சபையிடமும் நியாயம் கேட்பதற்கான வலிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களிடம் பலம் இல்லை, சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும் அப்படி என்றால் இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய இனப்பிரச்சினையை வெல்வதற்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். அது சரணாகதி அரசியல் இல்லை என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் நிறைய விட்டுக்கொடுப்புக்களை இந்த அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரித்ததன் காரணத்தினால் தான் இன்றைக்கு எங்களுடைய மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக் கூடிய வசதிகள் கிடைத்துள்ளது.
கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் இன்றைக்கு பல மாதங்களாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை சொல்லுகின்ற வகையில் தொடர்ச்சியாக நியாயமான போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள் என்று சொன்னால் அது இன்றைய அரசுக்கு செய்கின்ற ஆதரவு. இன்றைக்கு எங்களுடைய மக்களின் காணிகள் பலவற்றை இராணுவம் சூறையாடியுள்ளது. அந்த நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
எம் மக்களுக்கு அந்த துணிச்சல் வந்தது இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தம் இனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய பல விடயங்களை தாண்ட வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு செய்கின்ற ஆதரவுகள் தான் இன்றைக்கு எங்களுடைய போராட்டங்களை மேலே கொண்டு வர வைத்துள்ளது என்பதனை யாரும் மறந்து விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் காணிகளை இராணுவம் சூறையாடியுள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment