கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா -
சீனாவில் 20 கோடி மக்களின் பசியை போக்கும் அளவுக்கு கடல் நீரில் அரிசியை விளைய வைத்து சீன விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.சீனாவில் கடல் நீரில் விவசாயம் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் துணையுடன் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
சீனாவின் மஞ்சள் கடல் அருகே அமைந்துள்ள குயிங்டாவ் பகுதியில் கடல் நீரின் துணையுடன் சுமார் 200 வித்தியாசமான தானியங்களை ஆராய்ச்சியாளர்கள் பயிரிட்டனர். அதில், அரிசி வகைகளும் அடங்கும். இதில் ஒரு ஹெட்டேருக்கு சுமார் 4.5 டன் அரிசி விளையும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பாத்தனர். ஆனால் 9.3 டன் அரிசி விளைந்துள்ளது.
இதில் 10க்கு மேற்பட்ட பகுதியில் அரிசிகளை பயிரிடும் பட்சத்தில் 20 கோடி மக்களுக்கு தேவையான 50 மில்லியன் டன் அரிசியை விளைவிக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர, இதன் மூலம் சீனாவின் அரிசி உற்பத்தியை 20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விளைந்த அரிசியின் 6 டன் அளவுக்கு ஒரு கிலோ 6 பவுண்ட் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடல் நீரில் 20 கோடி பேருக்கு அரிசி விளைச்சல்: அசத்தும் சீனா -
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment