சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சி! மூவர் சிக்கினர்: ஐவர் தப்பியோட்டம் -
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த மூன்றுஇளைஞர்கள் உடப்பு பகுதியில் இன்று கடற்படையினரால் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் உடப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்கள் எனத்தெரிவிக்கப்படுகிறது.
உடப்பு பகுதி கடற்கரையில், சந்தேகத்திற்கிடமான முறையில் எட்டு பேர் இருந்ததாகவும்,அவர்களை கடற்படையினர் கைது செய்ய முயற்சித்த போது,ஐந்து பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சி! மூவர் சிக்கினர்: ஐவர் தப்பியோட்டம் -
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment