அண்மைய செய்திகள்

recent
-

குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வழங்கும் நாடு -


உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் பெண்களுக்கு குறைந்து வரும் நிலையில், சில நாடுகள் ஜனத்தொகையை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.கடந்த 1950 தொடங்கி உலகில் பல்வேறு நாடுகளில் மகப்பேறு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிவை சந்தித்து வருகிறது. மகப்பேறு விகிதம் சரிவுக்கு முக்கிய காரணிகளாக பெண்கள் முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, நிதி சூழ்நிலைகள் மற்றும் மேம்பட்ட கல்வி என்பவையை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இதனால் பல நாடுகள் தம்பதிகளை உறவுக்கு ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது மட்டுமின்றி பெருந்தொகையும் இதற்கென ஒதுக்கி வருகின்றன.ஸ்பெயின் நாடு தம்பதிகளுக்கு மகப்பேறு ஆலோசனை வழங்கவே சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து தம்பதிகளை ஊக்குவித்து வருகிறது. ஹாங்காங் அரசு சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாடு தம்பதிகளை உறவுக்கு ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்கென 1.6 பில்லியன் பவுண்ட்ஸ் நிதியையும் ஒதுக்கியுள்ளது. இத்தாலியில் அரசே பாலியல் உறவு தொடர்பான விளம்பரங்களை ஊக்குவித்து வருகின்றது.

டென்மார்க்கில் நிறுவனம் ஒன்று விடுமுறைக்கு செல்லும் இளம் தம்பதிகள் குறித்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 3 ஆண்டுகள் குழந்தைக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஜப்பானில் பெற்றோர் தொடர்பில் இளம் தம்பதிகளுக்கு விளக்கமளிக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து உதவி வருகின்றனர். தென் கொரியாவில் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுடன் புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு பின்னர் அலுவலகங்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. அன்றைய நாள் குடும்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வழங்கும் நாடு - Reviewed by Author on December 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.