அண்மைய செய்திகள்

recent
-

இது ஆபத்தான ஒன்று: உங்களுக்கு தெரியுமா? -


காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது.

அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காதில் உள்ள அழுக்கை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு?

காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.
 காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது ஏன்?
காதில் பட்ஸ் பயன்படுத்தும் போது அது காதினுள் சிக்கி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதோடு பட்ஸில் உள்ள காட்டன், ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்பட்டுள்ளதால் அது காதினுள் செல்வதற்கும் கூட அதிக வாய்ப்புள்ளது.

எனவே இந்த பட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஆபத்தான ஒன்று: உங்களுக்கு தெரியுமா? - Reviewed by Author on December 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.