அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதலான வருடாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரசாங்க ஊழியர்களின் வருகை, செயல்திறன்களை அடிப்படையாக கொண்டு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்த நடைமுறையின் கீழ் அரசாங்கத்துறை சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களும் நன்மை அடைவார்கள் என அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், அரசாங்க ஊழியர்களுக்காக வருடாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் இம்முறை உரிய வகையில் அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment