இலங்கையில் 3 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு தொழில்வாய்ப்பு!
இலங்கையில் கட்டுமான தொழிலுக்காக 3 இலட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற நிகழ்வில், நாட்டின் கட்டுமான பணியில் 3 லட்சம் வெளிநாட்டவர்கள் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் தொழிலற்ற, இளைஞர்கள், யுவதிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பணியாளர்கள் அழைத்து வரப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில், 15 முதல் 24 வயதில் தொழில் வாய்ப்பற்ற 21.6 வீத இளைஞர்கள் உள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் எண்ணிக்கை 18 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 3 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு தொழில்வாய்ப்பு!
Reviewed by Author
on
January 15, 2018
Rating:

No comments:
Post a Comment