அண்மைய செய்திகள்

recent
-

வியட்நாமில் விமானியான இலங்கைத் தமிழன் -


இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட திவாகரன் என்ற இளைஞன், வியட்நாம் நாட்டில் விமானியாக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியிலும் தொடர்ந்து கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற்படிப்பை இந்தியா மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படித்து வியாபார நிர்வாக முதுமானி பட்டத்தை பெற்றார்.

இவர் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் மகன் என்பதுடன், அவருக்கு பிரத்தியேக செயலாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையை சேர்ந்த ஒரு தமிழன் வியட்நாம் நாட்டில் விமானியானமை குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் விமானியான இலங்கைத் தமிழன் - Reviewed by Author on January 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.