வவுனியா லியோநிஷா எழுதிய 'தாயுமானவன்' கவிநூல் வெளியீட்டு விழா.
பெண் படைப்பாளி வவுனியா லியோநிஷா பாலசிங்கம் எழுதிய 'தாயுமானவன்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 06.01.2018 காலை 09.30 மணிக்கு ஈழத்தின் வவுனியா மாவட்ட நகரில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் ஆரம்பமானது.
நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக
மன்னார் கலையருவி இயக்குநர்/மன்னா பத்திரிகை ஆசிரியர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் கலந்துகொண்டார்.
விசேட அழைப்பாளராக
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்றார்.
விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை வவுனியா வேப்பங்குளம் சூசையப்பர் ஆலய மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை
அருட்பணி திருகோணமலை குவாடலுப்பே ஆலய பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்கினார்.
ஆசியுரையினை
மறைக்கல்வி இயக்குநர் அருட்பணி லக்ரன் டீ சில்வா அடிகளார் ஆற்றினார்.
தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை வகித்த தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வெளியீட்டிற்கு முன்னதாக விருந்தினர்கள் மற்றும் நூலாசிரியருக்கான கெளரவிப்புகள் வழங்கப்பட்டன. கவிஞர் வே. தொடர்ந்து முல்லைத்தீபன் வாழ்த்துக்கவி வழங்கினார். வெளியீட்டுரையினை அடிப்படை ஊடகக் கற்கை நிலைய விரிவுரையாளர் சந்திரா பாலச்சந்திரன் நிகழ்த்தினார்.
நூலினை மன்னார் கலையருவி இயக்குநரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை நூலாசிரியரின் உறவினர் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர்க்கு நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
நூலின் நயவுரையினை அடிப்படை ஊடகக் கற்கை நிலைய இயக்குநர் இரா.இராஜேஸ்வரன் ஆற்றினார். நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன், இளமை பண்பலை வானாலி இயக்குநர் ஸ்ரீபதி மிருணன் ஆகியோரும் நூலாசிரியருக்கான வாழ்த்துரை அளித்தனர்.
பிரதம விருந்தினர் உரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் ஆற்றினார். தமிழ்விருட்சம் செயலாளர் மாணிக்கம் ஜெகன், யோ.புரட்சி ஆகியோரின் நூற்படைப்பு பற்றிய உரைகள் இடம்பெற்றததைத் தொடர்ந்து, அடிப்படை ஊடகக் கற்கை நிலைய மாணவர்களினால் நூலாசிரியருக்கான பாராட்டுப் பரிசில் வழங்கல் இடம்பெற்றது. ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் லியோநிஷா பாலசிங்கம் வழங்கினார்.
இவ்வெளியீட்டு நிகழ்வினை இளைய அறிவிப்பாளர்கள் ஜெஸ்லின் மற்றும் துர்க்கா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக
மன்னார் கலையருவி இயக்குநர்/மன்னா பத்திரிகை ஆசிரியர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் கலந்துகொண்டார்.
விசேட அழைப்பாளராக
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்றார்.
விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை வவுனியா வேப்பங்குளம் சூசையப்பர் ஆலய மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை
அருட்பணி திருகோணமலை குவாடலுப்பே ஆலய பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்கினார்.
ஆசியுரையினை
மறைக்கல்வி இயக்குநர் அருட்பணி லக்ரன் டீ சில்வா அடிகளார் ஆற்றினார்.
தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை வகித்த தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வெளியீட்டிற்கு முன்னதாக விருந்தினர்கள் மற்றும் நூலாசிரியருக்கான கெளரவிப்புகள் வழங்கப்பட்டன. கவிஞர் வே. தொடர்ந்து முல்லைத்தீபன் வாழ்த்துக்கவி வழங்கினார். வெளியீட்டுரையினை அடிப்படை ஊடகக் கற்கை நிலைய விரிவுரையாளர் சந்திரா பாலச்சந்திரன் நிகழ்த்தினார்.
நூலினை மன்னார் கலையருவி இயக்குநரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை நூலாசிரியரின் உறவினர் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர்க்கு நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
நூலின் நயவுரையினை அடிப்படை ஊடகக் கற்கை நிலைய இயக்குநர் இரா.இராஜேஸ்வரன் ஆற்றினார். நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன், இளமை பண்பலை வானாலி இயக்குநர் ஸ்ரீபதி மிருணன் ஆகியோரும் நூலாசிரியருக்கான வாழ்த்துரை அளித்தனர்.
பிரதம விருந்தினர் உரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் ஆற்றினார். தமிழ்விருட்சம் செயலாளர் மாணிக்கம் ஜெகன், யோ.புரட்சி ஆகியோரின் நூற்படைப்பு பற்றிய உரைகள் இடம்பெற்றததைத் தொடர்ந்து, அடிப்படை ஊடகக் கற்கை நிலைய மாணவர்களினால் நூலாசிரியருக்கான பாராட்டுப் பரிசில் வழங்கல் இடம்பெற்றது. ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை நூலாசிரியர் லியோநிஷா பாலசிங்கம் வழங்கினார்.
இவ்வெளியீட்டு நிகழ்வினை இளைய அறிவிப்பாளர்கள் ஜெஸ்லின் மற்றும் துர்க்கா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
வவுனியா லியோநிஷா எழுதிய 'தாயுமானவன்' கவிநூல் வெளியீட்டு விழா.
Reviewed by Author
on
January 08, 2018
Rating:

No comments:
Post a Comment