அண்மைய செய்திகள்

  
-

உண்ணாவிரதத்தில் குதிக்கும் இராமேஸ்வரம் மீனவர்கள்! காரணம் என்ன?


கச்சத்தீவு பெருநாளுக்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதி அளிக்காததை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய பெருநாள் பெப்ரவரி 23, 24 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இராமேஸ்வரத்திலிருந்து 62 விசைப்படகுகளில் இந்திய பக்தர்கள் கச்சத்தீவு பெருநாளுக்கு செல்ல பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டுப்படகில், கச்சத்தீவு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.
நடராஜனின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கக் கோரியும், நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

காலங்காலமாக கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகு மூலமே சென்று வந்துள்ளோம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாட்டுப்படகில் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் மணிகண்டனிடம் முறையிட்டோம். அவர் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
ஆனால், கச்சத்தீவுத் திருவிழாவிற்கு நாட்டுப்படகுகளுக்கு அனுமதி இல்லை என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதைக் கண்டித்தும், கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில் செல்ல அனுமதிக்கக் கோரியும் இராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன்பு நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான செரோன்குமார் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதத்தில் குதிக்கும் இராமேஸ்வரம் மீனவர்கள்! காரணம் என்ன? Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.