வங்காலை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு-(படம்)
மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று வெள்ளிக்கிழமை
19-1-2018 காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை
4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான சென்ஜோண் குணசீலன் குருஸ் (வயது -50)என தெரிய வந்துள்ளது.
குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை (17) காலை படகு ஒன்றில் மீன் பிடிக்க தனியாக கடலுக்குச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த மீனவர் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சக மீனவர்கள் கடலில் சென்று தேடிய போது படகு மாத்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொடர்ச்சியாக இரு தினங்கள் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இணைந்து தேடிய போதும் குறித்த மீனவர்
கண்டு பிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று(19)
வெள்ளிக்கிழமை காலை கடலில் மிதந்த நிலையில் சடலம் சக மீனவர்களினால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது.
சடலத்தை பொறுப்பேற்ற வங்காலை பொலிஸார் மன்னார் வைத்திய சலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரனைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
.
வங்காலை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு-(படம்)
Reviewed by Author
on
January 19, 2018
Rating:

No comments:
Post a Comment