சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 109 பேர் தற்காலிக முகாமில்
ராகலை, ஹல்கரனோயா தோட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை சேர்ந்த, 39 சிறுவர்கள் உள்ளடங்களாக 109 பேர் தற்போது ஹல்கரனோயா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர்.
பாதிக்கபட்டவர்களுக்கான முதற்கட்ட நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர், தோட்ட நிர்வாகம் உட்பட பொது மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் கட்ட நவடிக்கையாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவிசரிதவியல் அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு இவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்க தோட்ட நிர்வாகம் உட்பட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி பாதிக்கபட்ட மக்களை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், மற்றும் சரஸ்வதி சிவகுரு ஆகியோர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர், இதன் போது தோட்ட நிர்வாகத்துடன் பேசி இவர்களுக்கான வீட்டு திட்டத்தை துறிதகதியில் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 109 பேர் தற்காலிக முகாமில்
Reviewed by Author
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment